ஏறாவூர் 3ஏ சனசமூக நிலையத்தினால் நடாத்தப்பட்ட விசேட விழாவின்போதுசமூக முன்னோடிகள் வரிசையில் ஊடகத்துறையில் 33 வருடங்கள் அனுபவமுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்ஜிஏ நாஸர் “ஊடக ஒளிச்சுடர்” எனும் பட்டம் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
சனசமூக நிலையத்தின் தலைவர் றூமி தலைமையில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முதன்மை அதிதிகளாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளரும் கிழக்கு மாகாண உள்ளூராட்சி பதில் ஆணையாளருமான அஸ்மி, ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் முஸம்மில், காத்தான்குடி பிரதேச செயலாளர் நிகாறா மௌஜூத், மட்டக்களப்பு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் றிப்கா மற்றும் ஏறாவூர் நகர முதல்வர் நழீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

