கிறிஸ்டல் சிம்போரி கப்பல் திருகோணமலையை வந்தடைந்தது

550 சுற்றுலாப் பயணிகளுடன் எம்.வி கிறிஸ்டல் சிம்போரி என்ற கப்பல் இன்று(23) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது.
அவுஸ்திரேலியா, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இந்தக் கப்பலில் பிரவேசித்தனர்.
திருகோணமலையை வந்தடைந்த அவர்கள் திருகோணமலை, சீகிரியா, ஹபரான போன்ற இடங்களை பார்வையிடவுள்ளனர்.
இந்தக் கப்பலில் 497 பணிக்குழாமினரும் அடங்குகின்றனர்.
கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா மையமான திருகோணமலைக்கு இந்த சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளமையானது சுற்றுலாத் துறைக்கு பெரும் உந்துசக்தியாக அமையும் என சுற்றுலாத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *