தம்பிலுவில் பொது நூலகம் இரண்டாம் தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச சபையின் கீழ் செயல்படும் தம்பிலுவில் பொது நூலகம், பல்வேறு சமூகக் குழுக்களால் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வாசகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் பயன்படுத்தப்படும் முக்கியமான அறிவுக் களஞ்சியமாக திகழ்ந்து வருகின்றது.

அந்த வகையில் கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில், இந்நூலகம் 2023 ஆம் ஆண்டிலிருந்து தரம் மூன்றிலிருந்து இரண்டாம் தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான தகமைச் சான்றிதழ் இலங்கை தேசிய நூலக ஆவணவாக்கல் சேவை சபையினால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அங்கீகாரம், தம்பிலுவில் பொது நூலகத்தின் சேவைகள், வளங்கள் மற்றும் சமூகத்திற்கான பங்களிப்பை வெளிப்படுத்தும் முக்கியமான அடையாளமாகும். கல்வி மற்றும் கலாசார வளர்ச்சிக்கான மையமாக இந்நூலகம் தொடர்ந்து செயல்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *