விசேட சுற்றிவளைப்பு; போதைப்பொருட்களுடன் 405 பேர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று(08) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 405 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 99 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 221 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 85 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 110 கிராம் 716 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 127 கிராம் 254 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும்,  741 கிராம் 255 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *