ஏறாவூரில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல் திட்டம்

“முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்பாட்டிற்கு இணைந்த வகையில் விஷ போதைப் பொருட்களை தடுப்பதற்கான வாரத்தினை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக, விஷ போதைப்பொருள் விற்பனை விநியோகத்தை கட்டுப்படுத்தி அடக்குதல், விஷ போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையானவர்களை அவ்அழிவுகரமான பழக்கத்திலிருந்து விடுவித்து புனர்வாழ்விற்காக ஆற்றுப்படுத்தல் நோக்கங்களை மையப்படுத்தி ஏறாவூர்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களும், ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸாரும் இணைந்து வீதியோர துண்டுப்பிரசுரங்கள் மற்றும் ஸ்டிக்கர் சுவரொட்டிகளையும் வழங்கி விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *