“முழு நாடும் ஒன்றாக” தேசிய போதைப் பொருள் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான விழிப்பூணர்வு நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜின் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர் தினேஸின் ஏற்பாட்டில் புதிய மாவட்ட செயலகத்தில் நேற்று(04) இடம்பெற்றது.
நாடளாவிய ரீதியில் விஷ போதைப்பொருள் விற்பனை விநியோகத்தை கட்டுப்படுத்தல் மற்றும் பயன்பாட்டில் அடிமையானவர்களை பழக்கத்திலிருந்து விடுவிட்பதற்கும் புனர்வாழ்விற்கான ஆற்றுப்படுத்தல் விழிப்புணர்வு போன்ற பல செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதனை முன்னிட்டு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுப்பிரசுரங்கள் வழக்கப்பட்டன.

