நீண்ட காலத்தின் பின்னர் பிரதேச மட்ட விளையாட்டு நிகழ்வில் அருணோதயா பெண்கள் அணியினர் பங்கேற்ப்பு ..!

வடமராட்சி கிழக்கு பிரதேச மட்ட கழகங்களுக்கிடையிலான கரப்பந்தாட்டப் போட்டியில் மாமுனை கலைமகள் விளையாட்டு மைதானத்தில் இன்று(22)இடம்பெற்ற போட்டியில் ஆழியவளை அருணோதயா அணியினர் செம்பியன் அணியினரை எதிர்த்து போட்டியிட்டனர்.

ஆனால் குறித்த போட்டியில் ஆழியவளை அருணோதயா பெண்கள் அணியினர் தோல்வியடைந்தாலும் அதிகளவானவர்களால் பாராட்டுப் பெற்றுள்ளனர்

நீண்ட காலத்திற்கு பின்பு ஆழியவளை பெண்கள் அணியினர் மீண்டும் விளையாட்டு நிகழ்வுகளில் ஈடுபட தொடங்கியுள்ளமை அப்பகுதியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *