வானிலை பாதிப்பு பற்றிய தகவல்களை பெறக்கூடிய தொழில்நுட்ப கட்டமைப்புகளை கடந்த கால அரசாங்கம் ஒழுங்காக பராமரிக்காததனால் எமக்கு பாரிய அனர்த்தம் ஒன்றை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்திலும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான தொழில் உபகரணங்கள் மட்டக்களப்பில் வழங்கி வைக்கப்பட்டடன.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் காலங்களில் இயற்கை அனர்த்தத்தை முன்கூட்டியே அறிந்து கொள்ளக்கூடிய தொழில்நுட்ப கட்டமைப்பை நாம் தற்போது ஏற்படுத்தி பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய திட்டங்களை வகுத்து வருகின்றோம்.
நமது அரசாங்கமானது மக்களின் நலனுக்காக என்றும் முன்னிற்கும் இயற்கை அனர்த்தங்கள் பற்றி எதிர்க்கட்சிகள் குறை கூறியிருந்தாலும் கூட இடம்பெற்ற சம்பவங்கள் பற்றி விசாரணை செய்ய நாம் தற்போது பாராளுமன்றத்தில் ஒரு குழு ஒன்றை அமைத்து செயற்பட்டு வருகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

