திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில், மாவட்ட செயலகத்தின் பிரதான மாநாட்டு மண்டபத்தில் நேற்று (26) மாவட்ட விலை நிர்ணயக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
எதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது? பொதுமக்களுக்கு நியாயமான விலையில் சேவைகள் கிடைப்பதையும், மாவட்டத்தின் பொருளாதாரச் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு பின்வரும் துறைகள் குறித்து ஆராயப்பட்டது:
தொழிலாளர் ஊதியம், கட்டுமானப் பொருட்களின் விலைகள், போக்குவரத்து மற்றும் இயந்திர வாடகை, மாமிச உணவுப் பொருட்களின் உச்ச வரம்பு விலை
தற்போதைய சந்தை நிலவரம் மற்றும் எதிர்காலத் தேவைகளைக் கருத்திற் கொண்டு, மாவட்ட மக்களுக்கு சுமையற்ற வகையில் நியாயமான விலை அமைப்பை உருவாக்க இக்கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மாவட்ட பிரதம கணக்காளர் ப. ஜெயபாஸ்கர், மாவட்ட பொறியியலாளர் ஏ. கே. எம். நபீல் உள்ளிட்ட துறைசார்ந்த உயர் அதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

