யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலுடன் மோதி பளை பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்
யாழில் இருந்து இன்று(11) காலை 6.30 மணியளவில் கொழும்பு நோக்கிப் பயணித்த ரயில் 07.30 மணியளவில் பளை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை மோதியுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

