கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இரத்த தான முகாம்

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நிலவி வந்த இரத்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், நேற்று(02) இரத்த தான முகாம் நடைபெற்றது.

 

இம்முகாம் வைத்தியசாலை நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றதுடன், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர்.

 

மனிதநேய உணர்வை வெளிப்படுத்தும் வகையில் பலர் தங்களின் மதிப்புமிக்க இரத்தத்தை தானமாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

 

இந்நிகழ்வில் தர முகாமைத்துவ வைத்திய அதிகாரி டொக்டர் ரயீஸ், இரத்த வங்கி மருத்துவ அதிகாரி மருதராஜன், மேட்ரன், இரத்த வங்கி பணியாளர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

இரத்த தான முகாம் மூலம் அவசர சிகிச்சைகளுக்குத் தேவையான இரத்த சேமிப்பை அதிகரிக்கும் முயற்சியாக இது அமைந்ததுடன், பொதுமக்களிடையே இரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.

 

மேலும், இரத்த தானத்தில் பங்கேற்ற தன்னார்வலர்களை பாராட்டும் விதமாக நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது.

 

இந்த முயற்சி சமூக ஒற்றுமையையும், மனிதநேயப் பொறுப்புணர்வையும் வலுப்படுத்தும் முக்கிய செயலாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *