தாளையடி அந்தோனியார் ஆலயத்தில் திருப்பாடுகளின் காட்சி…

யாழ் வடமராட்சி கிழக்கு தாளையடி புனித அந்தோனியார் ஆலயத்தில் சிலுவையோடு பயணம் என்னும் திருப்பாடுகளின் காட்சி நேற்று(21) நிகழ்த்தப்பட்டது

தாளையடி பங்குத்தந்தை அருட்பணி A. யஸ்ரின் அடிகளார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ் இளையோர் ஒன்றிய இளையோர்கள் மற்றும் தாளையடி பங்கு இளையோர்களால் இந்த நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டது.

தாளையடி புனித அந்தோனியார் ஆலய முன்றலில் நடாத்தப்பட்ட “சிலுவையோடு பயணம்” என்னும் திருப்பாடுகளின் காட்சி பக்தர்களுக்கு காண்பிக்கப்பட்டதுடன் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *