இலங்கை கடற்பரப்புக்குள் எல்லைத் தாண்டிய, கடற்றொழில் ஈடுபட்ட 12 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் இதனை சூரியன் செய்தி பிரிவுக்கு உறுதிபடுத்தினார்.
காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வருகை தந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை காரைநகர் கடல் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்தபோது நேற்றிரவு இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதன்போது, விசைப்படகினையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

