காத்தான்குடியில் நவீன உள்ளக விளையாட்டு அரங்கு; ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு

காத்தான்குடி ஆற்றங்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இன்று (13) நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன்போது, நவீன வசதிகளுடன் கூடிய உள்ளக விளையாட்டு அரங்கு (Indoor Stadium) அமைக்கும் திட்டம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும், இப்பகுதியின் முழுமையான முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட ஏனைய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் ஆராய்யப்பட்டது.

இந்நிகழ்வில், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஈ.எம் றுஸ்வின் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *