மணல் காணப்படும் இடங்களை அடையாளப்படுத்தும் நோக்குடன் உத்தியோகத்தர்கள் கள விஜயம்

கடந்த 10ஆம் திகதி அன்று வடமாகாண ஆளுநர் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில்  கிளிநொச்சியிலிருந்து புதிய பொறிமுறையூடாக ஒரு மாத காலத்தினுள் மணல் விநியோகத்தை ஆரம்பித்தல் மற்றும் மணலின் விலையை அரைவாசியாகக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

 

அதற்கமைய இன்றைய தினம் கள விஜயம் மேற்கொள்ளப்பட்டது.இ ரணைமடுக்குள கனகராஜன் ஆற்றுப்பகுதிகள் களவிஜயத்திவ் பார்வையிடப்பட்டது.

 

மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்,கிராமசேவையாளர், கனிய வளத்திணைக்கள உத்தியோகத்தர்  ,நீர்ப்பாசன தொழில்நுட்ப உத்தியோகத்தர், பிரதேச சபை உத்தியோகத்தர்,கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *