மறைந்த பாடகர் தேனிசை செல்லப்பாவிற்கு அஞ்சலி

மறைந்த பாடகர் தேனிசை செல்லப்பாவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு தாயக செயலணியின் கிளிநொச்சி கிளையினரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

குறித்த அஞ்சலி நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன், பொது அமைப்பு சார்ந்தோர் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *