முறுத்தானை கிராமத்தில் கற்ஸ்அப் “Catch-up” முறையில் கற்பித்தல் செயன்முறை

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முறுத்தானை கிராமத்தில் தரம் -05 கல்வியை கற்றதன் பின்னர் கல்வியை தொடரமுடியாத 25 மாணவர்களுக்கு “Catch-up” முறையில் கற்பித்தல் செயன்முறை உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் கிரான் பிரதேச செயலகம் மற்றும் கல்குடா வலயக் கல்வி அலுவலகத்துடன் இணைந்து CERI நிறுவனத்ததின் அனுசரணையுடன் இடம் பெருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

இந் நிகழ்வில் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் தி. மதிராஜ், கிரான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவகர், CERI நிறுவன பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *