கடும் மழையினால் வெல்லாவெளி மண்டூர் வீதி உடைப்பு; போக்குவரத்து துண்டிப்பு

மட்டக்களப்பில் சீரற்ற காலநிலையால் பெய்துவரும் மழையினால் வெல்லாவெளிக்கும் மண்டூருக்கும் இடையிலான வீதி வெள்ள நீரினால் உடைந்ததையடுத்து அவ்வீதியின் ஊடான போக்குவரத்து நேற்று (12) முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.

 

 

மண்டூர் கூமாவடிப் பாலம் தற்போது வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது. இந்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வாகனப் போக்குவரத்திற்காகப் பாலத்திற்கு அருகாமையில் தற்காலிக வீதி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

 

 

இந்த நிலையில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக, வெள்ள நீர் பெருக்கு வீதியை மூடிப் பாய்ந்ததுடன், தற்காலிகமாகப் அமைக்கப்பட்டிருந்த பாதையை உடைந்து முற்றாக சேதமடைந்துள்ளது

 

 

இந்த வீதி உடைந்ததன் காரணமாக மண்டூர், வெல்லாவெளி மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களுக்கிடையிலான போக்குவரத்து முற்றாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதையடுத்து அத்தியாவசியத் தேவைகள், மருத்துவத் தேவைகளுக்காக நகரப் பகுதிகளுக்குச் செல்ல முடியாமல் முடங்கியுள்ளனர்.

 

 

அதேவேளை வெல்லாவெளி மற்றும் போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் அலுவலகங்களுக்குச் செல்லும் அரச உத்தியோகஸ்தர்கள் கடமைக்குச் செல்ல முடியாமல் வீதியோரத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன் விவசாய நிலங்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *