இலங்கையில் 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியுள்ளதாக கல்விப் பிரதி அமைச்சர் நலின் ஹேவகே இன்று (19) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீரவினால் வாய்மூல விடைக்கான எதிர்பார்ப்புடன் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இந்த அதிரடிப் புள்ளிவிவரங்களை வெளியிட்டார்.

