சந்தேகத்திற்குரிய இடத்தில், நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைய நிலக்கீழ் ஆய்வு

கிழக்கு மாகாணத்தில், எந்தவொரு மனித எச்சங்களும் கண்டெடுக்கப்படாத நிலையில், ஒரு மனிதப் புதைகுழியாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்ட ஓர் இடத்தில், நீதிமன்ற உத்தரவின் பேரில் அரசாங்கச் செலவில் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டு குறிப்பிடத்தக்க எதுவும் கண்டெடுக்கப்படாத நிலையில் பணிகள் நிறுத்தப்பட்ட சந்தேகத்திற்குரிய இடத்தில், நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைய நிலக்கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் 150-க்கும் மேற்பட்ட முஸ்லிம் ஹஜ் யாத்ரீகர்களின் உடல்களை ஆய்வு செய்வதற்காக 2.8 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட பின்னர் ஆரம்பிக்கப்பட்ட அகழ்வாய்வுப் பணி, அடையாளம் காணப்பட்ட இடத்தில் சுமார் ஆறு அடி ஆழத்திற்கு அகழ்ந்தபோது கடல்நீர் வெளிப்பட்டதன் காரணமாக, 2026 ஏப்ரல் முதலாம் திகதி மாலை நிறுத்தப்பட்டது.

 

முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள்மடம் பகுதியில் உள்ள கடற்கரை காணியில், 2026 மார்ச் 30ஆம் திகதி திங்கட்கிழமையன்று களுவாஞ்சிக்குடி நீதவான் தர்மலிங்கம் பிரதீபனின் மேற்பார்வையின் கீழ், சட்டவைத்திய அதிகாரிகள், சட்ட நிபுணர்கள் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் பங்களிப்புடன் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

 

அகழ்வுப் பணிகளுக்காக அடையாளம் காணப்பட்ட நிலப்பரப்பை சுமார் ஆறு அடி ஆழத்திற்குத் தோண்டும்போது கடல் நீர் ஊற்றெடுத்ததையடுத்து, நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைவாக அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட்டதாக, அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு மூன்று நாட்கள் பூர்த்தியான 2026 ஏப்ரல் முதலாம் திகதி மாலை பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி முபாரக் முஹஸம் தெரிவித்தார்.

 

அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள மேலும் சில இடங்களில் அகழ்வுகளை மேற்கொள்ள வேண்டும் என முறைப்பாட்டாளரான அப்துல் மஜீத் அப்துல் ரவூப் நீதிமன்றத்திடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, அந்த நிலப்பரப்பை ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை சிங்கள, தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர் இடம்பெறும் சட்டத்தரணி முபாரக் முகஸம் குறிப்பிட்டார்.

 

2026, மே 14 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, நீதிபதியும் ஒரு குழு அதிகாரிகளும் அந்த இடத்தை ஆய்வு செய்யச் சென்றிருந்தனர், ஆனால் அப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக அவர்கள் திரும்ப வேண்டியிருந்தது.

 

மே 15 ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, புதைகுழி இருப்பதாகக் சந்தேகிக்கப்படும் நிலத்தில் காந்தப்புல-மின்னியல் ஒலி அதிர்வெண் (Magnetotelluric Audio-frequency) ஸ்கேன் நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

 

முறைப்பாட்டாளர்கள் தரப்பு தமது சொந்த செலவில் நிலக்கீழ் ஆய்வு நடத்தக் கோரியிருந்தபோதிலும், அந்த ஸ்கேனை அரசாங்கமே மேற்கொள்ள வேண்டுமென நீதிமன்றம் தெளிவாக அறிவுறுத்தியிருந்தது.

 

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, தொல்பொருள் ஆய்வு சிரேஷ்டப் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் தலைமையில் மே 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் ஸ்கேன் நடத்தப்பட்டது.

 

வழக்கு மே 18ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பான அறிக்கை மே 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பேராசிரியர் தெரிவித்ததாக சட்டத்தரணி முபாரக் முஹசம் தெரிவித்துள்ளார்.

 

இலங்கையில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் மனிதப் புதைகுழிகளில் தற்செயலாக எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்படாமல் ஒரு பாரிய புதைகுழியைக் கண்டறிவதற்காக அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது இடம் இதுவாகும்.

 

2014 சுற்றுலா நீதிமன்றம்

 

1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்து காத்தான்குடிக்குத் திரும்பிய முஸ்லிம்கள் குழு ஒன்று படுகொலை செய்து புதைக்கப்பட்டதாக உள்ளூர்வாசி அப்துல் மஜீத் அப்துல் ரவூப் களுவாஞ்சிக்குடி பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் 2014ஆம் ஆண்டு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக உள்ளூர் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

மேலும், இந்த வழக்கு 2014 ஜூலை முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, படுகொலை செய்து புதைக்கப்பட்டமைக்கான நியாயமான சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த பிரதேசத்தில் அகழ்வினை மேற்கொள்வதற்குத் தேவையான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு நீதிபதி ஏ.எம். ரியால் உத்தரவிட்டார், எனினும் அந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் கூறுகின்றனர்.

 

11 வருடங்களின் பின்னர் களுவாஞ்சிக்குடி, நீதவான் நீதிமன்றத்தில் முறைப்பாட்டாளரான அப்துல் மஜீத் அப்துல் ரவூஃப் தனது சட்டத்தரணிகள் மூலம் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், ஜூலை 11, 2025 அன்று இந்த வழக்கு திறந்த நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *