நிந்தவூர் மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பாக இருந்த அஷ்ரப் ஞாபகார்த்த கலாசார மண்டபத்தின் மீள் நிர்மாணப் பணிகள் இன்று (22) உத்தியோகபூர்வமாக மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நிந்தவூருக்கு விஜயம் செய்து, திட்டத்தை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

