மணல் அனுமதிப்பத்திரத்தை மணல் அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு டிப்பர்களும் அதன் சாரதிகளும் கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியாட்சகர் பிரிவுக்கு உட்பட்ட இரணைமடு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இன்று(11) மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின் மூலம் இரண்டு டிப்பர் சாரதிகளும் மற்றும் டிப்பர்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தின் இரண்டு டிப்பர் சாரதிகளும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் தடயப்பொருட்கள் கிளிநொச்சி நீதிமன்றி முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

