தர்மபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக தர்மபுர பொலிஸாருக்கு இன்று 23.032025 கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இன்றைய தினம் அப்பகுதியை சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் அப்பகுதியில் இருந்து தப்பி ஓடிய நிலையில்,
கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணம் மற்றும் 2250 போத்தல் கோடாவும் 20 லிற்றர் கசிப்பும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையில் தருமபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்



