கழையோடை ஆற்றை அண்டியதாக நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான தீகவாபி தொடக்கம் கழையோடை வரையிலான 4 கிலோமீற்றர் நீளமான பிரதான கால்வாய் அடிக்கடி உடைப்பெடுப்பதன் காரணமாக அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஒலுவில் மற்றும் பாலமுனை ஆகிய பிரதேசங்களில் காணப்படுகின்ற ஆயிரக்கணக்கிலான ஏக்கர் வயல் நிலங்கள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன.
மேற்குறித்த கால்வாயை புனரமைப்பதற்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தால் செலவின மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளதா? என்பதையும், இதற்கான செலவின மதிப்பீடு எவ்வளவு என்பதையும் மற்றும் இவ் புனரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் திகதி யாதென்பது தொடர்பாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன, அமைச்சர் லால் காந்தவிடம் 20ம் திகதி பாராளுமன்றில் கேள்வி எழுப்பவுள்ளார்.