முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் மட்டக்களப்பு வீட்டின் முன்னால் கடந்த 2021 இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எதிர்வரும் யூன் 16 ம் திகதிக்கு ஆஜராகுமாறு நேற்று(19) உத்தரவிட்டு ஒத்திவைத்துள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு யூன் 21 ம் திகதி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்தின் வீட்டிற்கு முன்னால் அமைச்சரின் மெய்பாதுகாப்பு உத்தியோகத்தர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 28 வயதுடைய பாலேந்திரன் என்ற இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதையடுத்து மெய்பாதுகாப்பு உத்தியோகத்தரை கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து இடம்பெற்று வந்த வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்டவர் சார்பில் ஆஜராகிய பிரபல சட்டத்தரணிகளான ந. கமலதாஸ், வி. சுதர்ஷன் ஆகியோர் இந்த கொலை தொடர்பாக பொலிஸார் உரிய விசாரணை நடாத்தப்படவில்லை என தொடர்ந்து ஆட்சேபித்து வந்ததுடன் உயிரிழந்தவின் பெற்றோரும் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவுக்கு மாற்றுமாறு சட்டத்தரணி ஊடாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த விசாரணையை கொழும்பு குற்றறத்தடுப்பு விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வந்த நிலையில் அமைச்சரின் வாகன சாரதியான தம்பான் என்றழைக்கப்படும் தனுசன் என்பவரை சந்தேகத்தின் பேரில் கொலைக் குற்றத்தின் அடிப்படையில் வெளிநாடு செல்ல இருந்த நிலையில் ஜனவரி 3 ம்திகதி கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் குறித்த வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நிலையில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட அமைச்சரின் மெய்பாதுபாப்பு உத்தியோகத்தர் மற்றும் அவரது சாரதி ஆஜராகிய நிலையில் நீதவான் அடுத்த வழக்கு எதிர்வரும் யூன் 16 ம் திகதி என திகதியிடப்பட்டு அடுத்த வழக்கு நீதின்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
இதேவேளை குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அமைச்சரின் மெய்பாதுபாப்பு உத்தியோகத்தர் ஒரு வருடத்தின் பின்னர் நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளதுடன் 3 வருடத்திற்கு பின்னர் சந்தேகத்தில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.