சீரற்ற காலநிலையால் இலங்கையில் ஒருவர் பலி; 8 பேர் காயம்

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்களைச் சேர்ந்த 485 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1757 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தகவல்படி, இன்று(30) காலை 9.00 மணி நிலவரப்படி புத்தளம் மாவட்டத்தில் ஒரு மரணம் பதிவாகியுள்ளது.
மேலும், பல்வேறு அனர்த்த சம்பவங்களில் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *