ஒட்டுசுட்டானில் குளவிக்கொட்டுக்கு இலக்கான மாணவர்களை ரவிகரன் எம்.பி பார்வையிட்டார்

ஒட்டுசுட்டானில் குளவிக்கொட்டுக்கு இலக்கான மாணவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் து. ரவிகரன் பார்வையிட்டார்.

அத்துடன் குளவிக் கூட்டினை அகற்றுதல் தொடர்பிலும் அவர் உடனடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய பாடசாலை வளாகத்திற்குள் இன்று(30) காலை பாடசாலை சென்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களும் குளவிக்கொட்டுக்கு இலக்கான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய வளாகத்திற்குள் கட்டிடம் ஒன்றில் குளவி கூடுகட்டி இருந்துள்ளது.

இன்றையதினம் வலயமட்ட விளையாட்டுப்போட்டிகள் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெறவுள்ள இந்நிலையில் திடீரென குளவிகள் கலைந்து பாடசாலை, மைதானத்தில் நின்றவர்களை துரத்தி கொட்டியுள்ளது.

இதனால் அச்சமடைந்த மாணவர்கள் அங்கும் இங்குமாக ஓடியுள்ளதுடன் குறித்த பாடசாலையின் மாடிக் கட்டிடம் ஒன்றில் பலகாலமாக குளவிகள் கூடுகட்டி வாழ்வதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *