வவுனியாவில் வீதிகளில் குப்பைகளை வீசிய ஐந்து நபர்களுக்கு தண்டப்பணம் விதிப்பு

வவுனியாவில் பொதுமக்கள் வீதிகளில் குப்பைகளை வீசிச் செல்வதினால் சுற்றுப்புறச்சூழல்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படுவதுடன் அப்பகுதிகளில் தூர்நாற்றங்களும் வீசுகின்றன.
இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வவுனியா சுகாதாரத் துறையினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது வீதிகளில் குப்பைகளை வீசிய ஐவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் மேற்கொண்டிருந்தனர்.
வழக்கினை முன்னெடுத்த வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஐவருக்கு முதற்கட்ட எச்சரிக்கை விடுத்தமையுடன் ஒவ்வொருவருக்கும் தலா 2000 ரூபா தண்டப்பணம் விதித்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *