சலசலப்புடன் நிறைவு பெற்றது வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி குழு கூட்டம்

அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று (27)  காலை 10மணிக்கு ஆரம்பமானது சுமார் 1மணி மட்டும் நடைபெற்றது.

இறுதியில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியுடன் அதற்கு அபிவிருத்திக்குழு தலைவர் பதில் சொல்லாத இடத்தில் கூட்டம் முழுமையான நிறைவு பெறாமல் சலசலப்புடன் நிறைவு பெற்றது.

குறித்த ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியானது அபிவிருத்தி குழு தலைவரிடம் “நீங்கள் வந்ததில் இருந்து நேரம் போகுது சாவகச்சேரி அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு செல்ல போறீங்க என்று சொன்னால் நாம் வடமராட்சி கிழக்கு சான்ற பிரச்சினைகளை எவ்வாறு கதைப்பது” என்பது ஆகும்

இத்துடன் அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு வந்த நபர்கள் உடனே வெளியேறியதை தொடர்ந்து கூட்டம் நிறைவு பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *