புனித நோன்புப் பெருநாள் நபிவழித் திடல் தொழுகை கல்முனை ஹுதா திடலில் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் முஹம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல்களின் ஏற்பாட்டில் இன்று (31) நடைபெற்றது.
இங்கு பெருநாள் தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் மெளலவி அஷ்ஷெய்க் ஏ.கலீலுர் ரஹ்மான் (ஸலபி) அவர்கள் நிகழ்த்தினார்.
இங்கு ஆயிரக்கணக்கான ஆண் பெண் இருபாலாரும் நோன்புப் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டதுடன் பலஸ்தீன் காஸா மக்களுக்காக பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.


