இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் பேர்மிங்காமில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் மெதுவான ஓவர் வீசிய குற்றச்சாட்டில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஒவ்வொரு வீரரின் போட்டி கட்டணத்திற்கும் ஐந்து சதவீத அபராதம் விதிக்கப்பட்டது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஷாய் ஹோப் குற்றத்திற்கான தண்டனையை ஏற்றுக் கொண்டார்.

