திருகோணமலை மூதூரைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை கடதாசிஆலை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிக்கமைய சம்பவதினமான நேற்று இரவு 7.00 மணியளவில் விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி பொ.ரத்நாயக்கா தலைமையிலான குழுவினர் குறித்த பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கைது செய்தனர் அவரிடமிருந்து 4 கஜ முத்துக்களை மீட்டனர்.
கைது செய்யப்பட்டவரையும் மீட்கப்பட்ட சான்று பொருட்களையும் விசேட அதிரடிப்படையினர் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

