சவூதி அரேபியாவின் மன்னரும், இரு புனித தலங்களின் பாதுகாவலராகவும் விளங்கும் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ், உலக நாடுகளுக்கெல்லாம் உதவிக்கரம் நீட்டிவரும் மனிதபிமானம், மனித நேயம், சகோதரத்துவம் மிகுந்த தலைவராகவும் திகழ்கிறார்.
மன்னர் சல்மான், 2015 ஆம் ஆண்டு சவூதி அரேபியாவின் மன்னராக பொறுப்பேற்றதிலிருந்து, உலகின் பல்வேறு பகுதிகளில் துன்புற்ற மக்களுக்கு உதவுவதிலும், உலக மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும் அவர் ஆற்றிவரும் நற்பணி உலக மக்களால் புகழப்படுட்டுக் கொண்டிருக்கிறது.
இயற்கை அனர்த்தங்கள் உட்பட உலகில் எந்தவொரு நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும், சவூதி அரசாங்கம், மன்னர் சல்மானின் வழிகாட்டுதலின் கீழ், உடனடியாக நிவாரண உதவிகளை அனுப்பிக் கொண்டிருக்கிறது.
மன்னர் சல்மானுடைய மனிதாபிமானப் பணியின் முக்கிய அமைப்பாக “மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் ” இயங்கிவருகிறது.
இவ்வமைப்பானது உலக நாடுகளின் நம்பிக்கையின் மையமாக இன்று மாறியுள்ளது. இயற்கை அனர்த்தங்கள், பேரழிவுகள், பசி, பட்டிணி, வறுமை, என எந்தவொரு சூழ்நிலையிலும் மனிதர்களுக்குத் தேவையான உதவிகளை மிகச் சிறப்பாக வழங்கிவரும் அமைப்பாக இது காணப்படுகிறது.
இவ் அமைப்பானது மக்கள் மத்தியில் ஊட்டச்சத்துப் குறைபாட்டை தவிர்க்க உணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குதல், வறுமை ஒழிப்பிற்காக உணவுப் பொருட்கள் விநியோகம், அகதிகளுக்கான தங்குமிடம், உணவு, மருத்துவமனைகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் குழந்தைகளுக்கான பல்வேறு நலத்திட்டங்களை எமன், பலஸ்தீன், சிரியா, துருக்கி, ஸ்ரீலங்கா போன்ற 100 க்கு மேற்பட்ட நாடுகளுக்கு இவ்வமைப்பு செய்துவருகிறது.
2015 இல் நிறுவப்பட்டதிலிருந்து, 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 3,100க்கும் மேற்பட்ட திட்டங்களை செயல்படுத்தியுள்ளது,
இதற்கான மொத்த பங்களிப்பு சுமார் $7.1 பில்லியன் ஆகும்.
அவ்வாறு, 1996–2024 காலப்பகுதிக்குள் சவூதி அரேபியா இதுவரையில் 170க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மனிதாபிமான உதவியாக $130 பில்லியனுக்கும் மேற்பட்ட உதவிகளையும் வழங்கியுள்ளது எனலாம்.
இவை அனைத்தும் சவூதி அரேபியாவினுடையதும் மன்னனுடையதும் மனிதநேயம் சார்ந்த தாராள பண்புகளின் வெளிப்பாடுகளே.
உலகம் முழுவதும் பாராட்டப்படும்
மன்னர் சல்மானின் சேவைகளை ஐநா உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகள் பாராட்டி விருதுகள் வழங்கியுள்ளன.
அவரது பணிகள் உலக மனிதநேயம் வளர்ச்சிக்கும் மிகுந்த பங்கு வகிக்கின்றன. இதன் மூலம் சவூதி அரேபியா உலகில் மனிதநேயமிக்க நாடாக அனைவராலும் போற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
மன்னர் சல்மானின் மனிதநேயப் பணிகள் உலகுக்கே ஒரு சிறந்த முன்னுதாரணமாகும்.


