இன்று அநுராதபுரத்திற்கு செல்லும் இந்திய பிரதமர்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று அநுராதபுர ஜய ஸ்ரீ மகா போதி விகாரையில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அநுராதபுரத்திற்கு யாத்திரை மேற்கொள்ளும் யாத்திரிகர்கள் மாற்று வீதிகளை பயன்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்குப் போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 8.30 – 11.00 வரை அநுராதபுர நகர், ஜய ஸ்ரீ மகா போதி மற்றும் தொடருந்து நிலையத்தை அண்மித்த பிரதான வீதிகள் இடைக்கிடையே மூடப்படும் என பொலிஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *