மட்டு மேற்கு வலயக் கல்வி அலுவலகம் முன்பாக பெற்றோர் ஆர்ப்பாட்டம்

பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்க கோரி மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்வி அலுவலகம் முன்பாக பெற்றோர் இன்று(04) கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

 

கடந்த ஐந்து வருடங்களாக தேசிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றிவரும் உத்தியோகத்தர்கள் ஆசிரியர்களாக கடமையாற்றிவரும் நிலையில் இவர்களுக்கு ஆசிரியர் நியமனத்தினை வழங்குமாறு கோரி கடந்த இரண்டு நாட்களாக சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்து வருவதுடன், கடந்த முதலாம் திகதி காந்தி பூங்கா முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் முன்னொடுத்து வந்த நிலையில் தொடர்ச்சியாக இவர்கள் பாடசாலைக்கு செல்லாமையினால் தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவும், அதனால் இவ்வாறாக தமது பிள்ளைகளின் கல்வி வாழ்வில் ஐந்து வருடங்களாக ஒளியேற்றி வந்துள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஆசிரியர் நியமனத்தை வழங்க வேண்டும் என கோரியே குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

 

குறித்த ஆர்ப்பாட்டத்தில் 70 இற்கு மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டதுடன், பதாதைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *