வவுணதீவு வயல் பிரதேசத்தில் யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

வவுணதீவு பாலைக்காடு வயல் பிரதேசத்தில் வேளாண்மைக்கு நீர் பாய்ச்ச சென்ற விவசாயி ஒருவர் யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் நேற்று(01) இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

 

நாவற்காடு மஞ்சு கட்டமை சேர்ந்த 70 வயதுடைய வைரமுத்து மகாலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

குறித்த விவசாயி வழமைபோல வேளாண்மைக்கு நீர் பாய்ச்சுவதற்காக சம்பவதினமான அன்றிரவு இரவு சென்றவர் காலையாகியும் வீடு திரும்பிவராத நிலையில் உறவினர்கள் அவரை தேடிச் சென்ற போது அவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிந்த நிலையில் கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு அறிவித்தனர்.

 

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *