தேர்தல் நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்த 3 பேர் கைது

ஏறாவூர், வாழைச்சேனை பிரதேசங்களில் தேர்தல் நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்த ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சிகளைக் கொண்ட இரு வேட்பாளர்கள் உட்பட 3 பேரை இன்று(06) கைது செய்துள்ளதாக அந்தந்த பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

 

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டமாவடி அந்நூர் பாடசாலையில் வாக்களிப்பு நிலையத்துக்கு அருகில் ஒரு கட்சியின் வேட்பாளர் அவரது ஆதரவாளர் உட்பட இருவர் வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க விடாது இடையூறு விளைவித்ததையடுத்து வேட்பாளர் மற்றும் ஆதரவாளரை பொலிஸார் கைது செய்தனர்.

 

அதேவேளை ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மீராங்கேணி வாக்களிப்பு நிலையத்துக்கு சென்ற ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ஒருவர் சென்று தமது கட்சிக்கு வாக்களிக்குமாறு கோரி வாக்களிப்புக்கு இடையூறு விளைவித்த வேட்பாளரை கைது செய்தனர்.

 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்தந்த பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *