முல்லைத்தீவில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த குடும்பஸ்தர் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தற்போது சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில் இ்ன்று(07) புதுக்குடியிருப்பு கள்ளியடி வயலில் வேலை செய்துகொண்டிருந்த குடும்பஸ்தர் மீது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.
அருமைநாயகம் யசோதரன் எனும் 42 வயது மதிக்கதக்க குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குடும்பஸ்தரின் சடலம் தற்போது புதுக்குடியிருப்பு பிரதேச ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளும் இடம்பெறுகின்றன.