இலங்கை விமான படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் விபத்து

இலங்கை விமான படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இராணுவ வீரர்களின் அணிவகுப்பொன்றின் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமான படைக்குச் சொந்தமான பெல் 212 ரக  ஹெலிகொப்டர் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது ஹெலிகொப்டரில் இருந்த 2 விமானிகள் உட்பட  12 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *