கண்டி அல்தெனிய, பரிகம பகுதியில் வெசாக் யாத்திரிகர்கள் பயணித்த பஸ் ஒன்று வீதியை விட்டு தவறி விழுந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்து கண்டி மற்றும் பேராதனை வைத்தியசாலைகளுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.