வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்டத் தடகளப் போட்டிகள், யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இன்று(22) காலை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்நிகழ்வின் ஆரம்பத்தில், அதிதிகள் பண்ட் வாத்திய அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டனர்.
தொடர்ந்து தேசியக்கொடி உள்ளிட்ட கொடியேற்றல், ஒலிம்பிக் தீபம் ஏற்றுதல் மற்றும் விளையாட்டு வீரர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு, மாணவர்களின் அணிவகுப்பு முதலான நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது பெருவிளையாட்டுகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

