மட்டக்களப்பில் முதுமாணி பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சிப்பாசறை

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் போதைப்பொருள் முற்தடுப்பை மேற்கொள்வதற்கு முதுமாணி பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சிப்பாசறை இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர். திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்தின் வழிகாட்டுதலில் மாவட்டத்தில் போதைப்பொருள் முற்தடுப்பை மேற்கொள்வதற்கான முதுமாணி பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சியானது மாவட்ட செயலக மண்டபத்தில் மாவட்ட போதைப் பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர் ப. தினேஷி ஏற்பாட்டில் இடம்பெற்றது.

மாவட்டத்தில் போதைப் பொருள் முற்தடுப்பு செயற்றிட்டத்தை வலுவூட்டும் செயற்றிட்டமாக இந் நிகழ்வு இடம்பெற்றது. கிராம, பிரதேச மட்டத்தில் போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்குத் தேவையான விழிப்புணர்வுகள் இவ் உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந் நிகழ்வில் வளவாளராக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய சிரேஷ்ட நிகழ்ச்சித் திட்ட அதிகாரி ஏ. சி. றஹீம், நிகழ்ச்சி திட்ட அதிகாரி திருமதி. எஸ். நிதர்ஷனா, போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர்கள், சமுதாயம் சார் சீர்திருத்த உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேசிய ரீதியில் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தினால் போதைப்பொருள் முற்தடுப்பு நிகழ்ச்சி திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *