பரந்தனில் கோர விபத்து; மாணவன் உயிரிழப்பு

கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவன் ஒருவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பரந்தன் பகுதியில் மாணவன் ஒருவர் தனது துவிச்சக்கரவண்டியில் (வழமையான பாதையில்) பயணித்துக் கொண்டிருந்தபோது, அவருக்கு பின்னால் மது வெறியில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து துவிச்சக்கரவண்டி மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

 

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு தலையிலும் உடலிலும் பலத்த காயங்களுக்குள்ளான மாணவன், உடனடியாக மீட்கப்பட்டு கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

 

விபத்துத் தொடர்பாக மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்துக்கான காரணம் குறித்து கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *