முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, முறையான அறிவுறுத்தல்களுக்குப் பிறகு மேலும் 17 தன்சல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக அதன் செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்தார்.
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நேற்று நாடு முழுவதும் பல தன்சல்கள் ஏற்பாடு செய்யப்பட்டன, மேலும் அனைத்து தன்சல்களும் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் மேற்பார்வையிடப்பட்டன.

