சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 சீன நாட்டு பிரஜைகள் கைது

கொள்ளுப்பிட்டியில் உரிமமின்றி பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 6 சீன நாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

காலி வீதியில் இயங்கி வந்த இரவு விடுதியொன்றினை முற்றுகையிட்டபோதே இக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 27 முதல் 48 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *