கரைச்சி பிரதேச செயலக கழகங்களுக்கிடையிலான கரப்பந்தாட்ட போட்டி ஆரம்பம்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக விளையாட்டுக்கழகங்களுக்கிடையிலான கரப்பந்தாட்ட தொடர் கிளிநொச்சியிலுள்ள வடமாகாண விளையாட்டு கட்டிடத்தொகுதியின் உள்ளக அரங்கில் ஆரம்பமாகியது. இன்றைய ஆரம்ப நாள் நிகழ்வு கரைச்சி பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் போல் ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கரைச்சி பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.பத்மசிறீ கலந்து கொண்டு வீரர்களை அறிமுகம் செய்து போட்டிகளை ஆரம்பித்து வைத்தார்.18கழகங்கள் குறித்த போட்டியில் பங்குபற்றுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *