களுத்துறையில் ஹொரணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பர பிரதேசத்தில் பொல்லால் தாக்கப்பட்டு வயோதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று(13) இரவு இடம்பெற்றுள்ளது.
தம்பர, மீவனபலான பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய வயோதிபரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சம்பவ தினத்தன்று, கொலை செய்யப்பட்ட வயோதிபர் தனது நெருங்கிய உறவினருடன் இணைந்து மதுபானம் அருந்திக் கொண்டிருந்துள்ளார்.
இதன்போது வயோதிபருக்கும் உறவினருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறின் போது சந்தேக நபரான உறவினர், வயோதிபரை பொல்லால் தாக்கி கொலை செய்துள்ளார்.
கொலைசெய்யப்பட்ட வயோதிபரின் சடலம் ஹொரணை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து 43 வயதுடைய சந்தேக நபரான உறவினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

