தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசோப்ட் இந்த ஆண்டு 9,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.
இது இந்த ஆண்டு நிறுவனத்தின் வேலை குறைப்புக்களின் அண்மைய அலையாகும்.
எந்தெந்த பிரிவுகள் மேற்கண்ட அறிவிப்பினால் பாதிக்கப்படும் என்பதை மைக்ரோசொப்ட் தெளிவாகக் குறிப்பிடவில்லை.
ஆனால், அதன் எக்ஸ்பாக்ஸ் வீடியோ கேமிங் பிரிவு இதனால் பாதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மைக்ரோசாப்ட் நிறுவனம் செயற்கை நுண்ணறிவில் அதிக அளவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
மேலும் ஏஐ மாதிரிகளைப் பயிற்றுவிப்பதற்காக மிகப்பெரிய தரவு மையங்களில் $80 பில்லியன் (£68.6 பில்லியன்) செலவிடுகிறது.
இந்த குறைப்புகள் மைக்ரோசொப்டின் 228,000-க்கும் மேற்பட்ட உலகளாவிய பணியாளர்களில் 4%-க்கு சமமாக இருக்கும்.
2025 ஆம் ஆண்டில் இதுவரை மூன்று சுற்று பணிநீக்கங்களை மைக்ரோசொப்ட் தொடங்கியுள்ளது.
இதில் மே மாதத்தில் 6,000 பணியிடங்களைக் குறைப்பதாகக் கூறியது அடங்கும்.
அண்மைய ஆண்டுகளில், பல பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களைப் போலவே, மைக்ரோசொப்ட் தரவு மையங்கள் மற்றும் சிப்களில் முதலீடு செய்வது உட்பட ஏஐயை வளர்ப்பதில் தனது வணிகத்தை மீண்டும் கவனம் செலுத்தியுள்ளது.

