யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில்
மாதாந்தம் பூரணை தினத்தில் இடம்பெறும் திருவாசகம் முற்றோதல் இன்றைய தினம் காலை 5.00 மணி முதல் சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம்பெற்றது.
அச்சிரம முதல்வர் கலாநிதி சாதனை தமிழன் மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் பல ஓதுவார்கள் இணைந்து திருவாசக முற்றோதலில் ஈடுபட்டனர்.

