இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாள் மரணத்தை வென்று உயிர்த்தெழுந்ததை நினைவு கூரும் வகையில் உலகம் முழுவதும் உயிர்த்த ஞாயிறு பெருவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.
இதனை முன்னிட்டு, நேற்று(04) இரவு நாடளாவிய ரீதியில் உள்ள தேவாலயங்களில் விசேட நள்ளிரவுத் திருப்பலிகள் இடம்பெற்றன.
அந்தவகையில் உயிர்த்த ஞாயிறு நள்ளிரவு ஆராதனை கிளிநொச்சி புனித திரேசாள் தேவாலயத்திலும் நடைபெற்றது.
குறித்த நள்ளிரவு ஆராதனை கிளிநொச்சி மறைக்கோட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

